மாஸ் படத்தில் தன் நாயகியான நயன்தாராவை வாயாரப் புகழ்கிறார் நடிகர் சூர்யா.
ஆதவன் படத்துக்குப் பிறகு, சூர்யாவும் நயன்தாராவும் இணைந்துள்ள படம் மாஸ். வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தில் தன்னுடன் நடிக்கும் நயன்தாராவின் நடிப்புத் திறமையை வெகுவாக மெச்சியுள்ளார் சூர்யா.
சமீபத்தில் நடந்த நண்பேன்டா பட விழாவில் அவர் நயன்தாரா பற்றி கூறுகையில், "மாஸ் படத்தில் வித்தியாசமான நயன்தாராவைப் பார்க்கலாம். இதற்கு முன் ஆதவனின் என்னுடன் நடித்தபோது இருந்த நயன்தாராவை விட இன்னும் எனர்ஜியுடன் அவர் நடித்துள்ளார். அவரது முற்றுலும் மாறுபட்ட நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்," என்றார்.
நயன்தாரா அடுத்து கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment