சென்னை : மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளக்காரத் துரை படம் கூடுதலாக 100 திரையரங்குகளில் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.
1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வெள்ளக்கார துரை.
விக்ரம் பிரபு முதன்முறையாக காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக திவ்யா நடித்துள்ளார்.
எழிலின் சிறந்த திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த இப்படம் வெற்றி பெற்றது. எனவே தற்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் அப்படம் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.
தனது முதல் படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக மீண்டும் நிறைய படங்களை தயாரிக்க இருப்பதாக அன்புசெழியன் தெரிவித்துள்ளார்.
Post a Comment