தனது முதல் இந்திப் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராயுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ் இந்தியில் மிகப் பெரிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். அவரது முதல் படமான ராஞ்ஜனா பெரும் வெற்றியைப் பெற்றது.
அடுத்த படமான ஷமிதாப்பில், சாதனையாளர் அமிதாப்புடன் நடித்தார். இளையராஜா, பால்கி என உச்சநிலை கலைஞர்கள் இடம்பெற்ற அந்தப் படம் மிகப் பெரிய கவுரவத்தை அவருக்கு தேடித் தந்துள்ளது.
அடுத்த இந்திப் பட வேலைகளில் உடனே இறங்கிவிட்டார் தனுஷ்.
ஷமிதாப்புக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்தை ராஞ்ஜனாவை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.
மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படம் தவிர வேறொரு இந்திப் படத்திலும் நடிக்க தனுஷ் சம்மதித்துள்ளார்.
Post a Comment