ஏப்ரலில் மணிரத்னத்தின் ஓகே கண்மணி

|

மணிரத்னம் சத்தமின்றி இயக்கி வரும் ஓகே கண்மணி (இதான் தலைப்பு என்று மணிரத்னம் சொல்லவில்லை.. பிசி ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார்!) படம் வரும் ஏப்ரலில் வெளியாகிறது.

‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனமும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏப்ரலில் மணிரத்னத்தின் ஓகே கண்மணி

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

எந்த அறிவிப்போ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Post a Comment