இந்தி படத்துக்காக ஸ்டைல் நடிகரை புகழும் சுள்ளான்?

|

சென்னை: சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் ஸ்டைல் நடிகரை விமர்சித்து வந்த சுள்ளான் தற்போது ஒரேயடியாக புகழ்ந்துதள்ளிக் கொண்டிருக்கிறார்.

சுள்ளானுக்கு தன்னை பெரிய வீட்டு மாப்பிள்ளை என்று பிறர் கூறுவது பிடிக்காது. இதனால் சில நேரங்களில் அவர் கோபம் அடைந்து மீடியாக்கள் மீது பாய்ந்ததும் உண்டு. எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு, அதை தவிர்த்து இன்னாரின் மருமகன் என்றே எப்பொழுது பார்த்தாலும் கூறாதீர்கள் என்றார்.

இவர் இப்படி பேச பாலிவுட்டில் உள்ள ஒரு கான் தன் படம் ரிலீஸாகும்போது எல்லாம் ஸ்டைல் நடிகரை புகழ்ந்து புகழ்ந்தே விளம்பரம் தேடி வருகிறார். இந்நிலையில் தான் சுள்ளான் நடித்துள்ள இந்தி படம் ரிலீஸாகியுள்ளது.

அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சுள்ளான் தனது மாமனாரான ஸ்டைல் நடிகரை விமர்சிக்காமல் மாறாக கடவுள், ராஜா, சிறந்தவர் என்று ஒரேயடியாக புகழ்ந்துள்ளார். இந்தி திரை உலகில் ஸ்டைல் நடிகருக்கு பெரும் மதிப்பு உள்ளது. அதிலும் சுள்ளானுடன் அந்த படத்தில் நடித்துள்ள பாலிவுட் ஜாம்பவான் ஸ்டைல் நடிகருக்கு நெருக்கமானவர்.

இதை எல்லாம் மனதில் வைத்து தான் சுள்ளான் அங்கு அடங்கி வாசிக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

Post a Comment