திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வதில் தெளிவாக இருக்கிறார் நடிகை த்ரிஷா.
த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கம் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் அஜீத்துடன் த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் நேற்று முன்தினம் வெளியானது. இதில் த்ரிஷாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள மேலும் மூன்று படங்கள் வெளிவரவிருக்கும் நிலையில், இப்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
அவற்றில் ஒரு படத்தை த்ரிஷாவின் வருங்காலக் கணவரான வருண் மணியனே தயாரிக்கிறார். திரு இயக்குகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே சமர் படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.
இந்தப் படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த கிராமத்துப் பெண் வேடத்தில் வருகிறார் த்ரிஷா.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.
Post a Comment