என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

|

அஜீத்தின் என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

ஏ எம் ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் - அனுஷ்கா - த்ரிஷா - விவேக் நடித்துள்ள என்னை அறிந்தால் 1600 திரையரங்குகளில் உலகெங்கும் வெளியாகியுள்ளது.

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் இந்தப் படம் வெளியானது. மேள தாளம் முழங்க, அதிரடியாக முதல் காட்சி தொடங்கியது துபாயில்.

தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் வார நாளான வியாழக் கிழமை காட்டி படத்தின் அதிகாலைக் காட்சிகளை ரத்து செய்துவிட்டனர்.

சென்னையில் காசி, ஜோதி, உள்ளகரம் குமரன் போன்ற அரங்குகளில் மட்டும் காலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி நடத்தப்பட்டது.

இங்கெல்லாம் படம் பார்த்த ரசிகர்கள், அஜீத்தின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று கூறி கொண்டாடினர்.

ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை குறை கூறியுள்ளனர்.

 

Post a Comment