ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. ரூ 250 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம் கத்தி புகழ் லைக்கா.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
இந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.
காரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள். விக்ரம் மற்றும் விஜய்யை வைத்து ஒரு திரைக்கதையை தயார் செய்திருந்தாராம் ஷங்கர்.
இந்தக் கதையை இப்போது ரஜினி - விக்ரம் அல்லது கமலை வைத்துப் பண்ணலாம் என ஒரு ஐடியா இருப்பதாகச் சொல்கிறார்கள்.
Post a Comment