தன் மீதான வழக்கை வாபஸ் பெற்ற பிவிபி நிறுவனத்தின் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் ஸ்ருதி ஹாஸன்.
கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் முதல் ஸ்ருதிஹாஸன்தான் நாயகியாக ஒப்பந்தமானார்.
ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகினார் ஸ்ருதி.
இதனால் தங்கள் நிறுவனத்துக்கு பெரிய நஷ்டமாகிவிட்டது என்று குற்றம்சாட்டிய தயாரிப்பாளர்கள், ஸ்ருதிஹாஸனை புதுப் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது எனக் கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்ருதிஹாஸன் இனி புதுப் படங்களில் ஒப்பந்தமாக இடைக்காலத் தடை விதித்தது.
பின்னர், ஸ்ருதிஹாஸனுடன் சமரசமாகிவிட்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக பிவிபி நிறுவனம் அறிவித்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதிஹாஸன், அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார்.
Post a Comment