ஆத்தாடி.... ராய் லட்சுமியை ‘26 வயது எலிசபெத் ராணி’ எனப் புகழ்ந்த ரசிகர்!

|

சென்னை: ரசிகர் ஒருவர் தன்னை எலிசபெத் ராணி எனப் புகழ்ந்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ராய் லட்சுமி. காஞ்ஸனா, மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது இவர், சவுகார்பேட்டை மற்றும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இது தவிர இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் அகிரா படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக இயங்கி வரும் பிரபலங்களில் ராய் லட்சுமியும் ஒருவர். தினமும் தனது புகைப்படம் அல்லது ஏதாவது கருத்தை அவர் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்தவகையில், இன்று, தான் காரில் அமர்ந்திருப்பது போன்ற செல்பி ஒன்றை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதைப் பார்த்த ரசிகர் ஒருவர், ‘நான் 26 வயதில் எலிசபெத் ராணியை பார்த்ததில்லை. ஆனால், இப்போது பார்க்கிறேன். தலையில் கிரீடம் மட்டும் தான் இல்லை' என கருத்து தெரிவித்துள்ளார்.

ரசிகரின் புகழ்ச்சியால் மனம் மகிழ்ந்த ராய் லட்சுமி அந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளார்.

 

Post a Comment