சென்னை: சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் குடும்பப் படங்களை விட பேய்ப் படங்களும் திகில் படங்களும் அதிக அளவில் வரத் துவங்கிவிட்டன. இதனை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டதால் புதிதாக படம் இயக்க வரும் அறிமுக இயக்குனர்களும் வித்தியாசமான கதைகளையே கையில் எடுக்கத் துவங்கி விட்டனர் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள படம் துடி, ஹலோ நான் ஒன்னும் படத்தோட பாதிப் பெயர மட்டும் சொல்லல படத்தோட முழுப் பெயரே துடி தான்.
படத்துல வர்றவங்க யாருக்காக துடிக்கிறாங்க அப்படிங்கிறது தான் கதை போல இருங்க இருங்க எதுக்கும் செக் பண்ணி பாத்துக்கலாம் அதாவது தமிழ்ல ஒரு பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த கதைதான் இந்த துடி யாம். அறிமுக இயக்குனர் ரிதுன் சாகர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இந்தப் படத்தை தைரியமா இயக்குறதோட இல்லாம படத்தோட தயாரிப்பாளாராகவும் மாறி இருக்காரு.
நிறையக் குறும்படங்கள் இயக்கிய கையோட படத்த இயக்க வந்திருக்கும் இவர் விஷுவல் கம்யூனிகேசன் முடிச்சிருக்காரு, படத்துல நடிகை அபிநயா, சுமன், பிரம்மானந்தம் இவங்களோட சூது கவ்வும் ரமேஷ் மற்றும் நளினி நடிச்சிருக்காங்க. படத்தோட கதை என்னென்னா ஒரு நட்சத்திர ஹோட்டல்ல நடக்கிற தீவிரவாதிகளின் தாக்குதல் தான் தானாம் ( லைட்டா சலீம் மாதிரி இருக்குல்ல) மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை நடக்கிற விசயங்கள் தான் கதையாம்.
டைட்டில்க்கு ஏத்த மாதிரி படம் " துடி" ப்பா வந்தா சரி...
Post a Comment