தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட நடிகையான லட்சுமி மேனனுக்கு வாய்ப்புகள் குவிந்தாலும், அவர் கவனமெல்லாம் படிப்பிலேயே நிலைத்திருக்கிறது.
நடிப்பையும் படிப்பையும் சம அளவில் தொடர்வேன் என்கிறார் இந்த தேவதை.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான கொம்பன் படம், இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதில் ரொம்பவே மகிழ்ந்துபோன லட்சுமி இப்படிச் சொல்கிறார்:
"நான், இதுவரை நடித்த படங்களில், 'கொம்பன்' வித்தியாசமான அனுபவம். அந்தப் படத்தின் கதையை இயக்குநர் முத்தையா என்னிடம் விரிவாகச் சொன்னார். படத்தில், நான்தான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அப்படி எனக்கு பொருந்துகிற மாதிரி என்ன இருக்கிறது? என்று முதலில் புரியவில்லை.
படம் திரைக்கு வந்தபிறகுதான் புரிந்தது. எந்த படத்துக்கும் வராத அளவுக்கு போன்கள், பாராட்டுகள் வந்து கொண்டே இருந்தன. இனிமேல், இதுபோன்ற கதைகளில்தான்0 நடிக்க வேண்டும் என முடிவே செய்துவிட்டேன்," என்றார்.
ப்ளஸ்டூ முடித்துவிட்ட லட்சுமி, அடுத்து பட்டப் படிப்பைத் தொடரப் போகிறாராம்.
Post a Comment