சென்னை: இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் அதரவா முரளி.இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோ விஜய் சேதுபதியை தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் சீனு ராமசாமி.
தென்மேற்கு பருவக் காற்று பல தேசிய விருதுகளை தமிழுக்கு கொண்டுவந்து சேர்த்தது.தற்போது விஷ்ணு மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கிக் கொண்டிருக்கும் இடம், பொருள், ஏவல் திரைபடத்தை தொடர்ந்து அதர்வாவை இயக்க இருக்கிறார் சீனு ராமசாமி.
பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வ தொடர்ந்து நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக் குதிரை உள்ளிட்ட நான்கு படங்களுமே வியாபார ரீதியாக தோல்வியை அடைந்தது.
இதில் பரதேசி படம் அதர்வாவுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.தற்போது ஈட்டி, கணிதன் மற்றும் மற்றொரு தேசிய விருது இயக்குனர் சற்குணம் இயக்கம் சண்டி வீரன் போன்ற படங்களில் நடித்து வரும் அதர்வா மூன்று படங்களையும் முடித்து விட்டுசீனு ராமசாமியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதர்வா வாங்குவாரா தேசிய விருது.....
Post a Comment