சென்னை: சோகப் படுவதா அல்லது துக்கப் படுவதா ஆனால் இரண்டில் ஒன்றைப் பட்டே ஆகவேண்டும். அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா நேற்று நடந்த 62 வது பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளாமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.
ஆனால் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட காவியத் தலைவன் படம் ஒரு விருதைக் கூடப் பெறவில்லை. இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை.
எப்படியாயினும் தமிழ் நாட்டில் வேகமாக அழிந்துவரும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நாடகக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காவியத் தலைவனை ஒரு பிரிவில் கூட கவுரவிக்காதது குறையே.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப்பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர் போன்ற 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது காவியத் தலைவன் . ஆனால் ஒன்றில் கூட விருதை வெல்லவில்லை.
Post a Comment