சென்னை: எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
2010ம் ஆண்டில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன்.
தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஷங்கர் , படத்திற்கான கதை முழுவதையும் முடித்து விட்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து கொண்டு இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
இதற்கான முயற்சியில் மொத்த படக்குழுவும் இறங்கி வேலை பார்க்கின்றனர், இதைப் பற்றிய செய்திகள் எதையும் வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர் படக்குழுவினர்.
எந்திரன் படம் 132 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி இருந்தது, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது எந்திரன் 2 படத்திலும் அதே போன்ற இடங்களை ஷங்கரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர்,
எந்திரன் முதல் பாகத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைகின்றனரா அல்லது புதியவர்களுடன் ஷங்கர் கைகோர்க்கிறாரா என்பது தெரியவில்லை.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதத்தில் புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment