சிங்கம் 3... சிபிஐ அதிகாரி அவதாரம் எடுக்கும் சூர்யா!

|

சென்னை: இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம். சிங்கம் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகமான சிங்கம் 2 வும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

தற்பொழுது அதன் மூன்றாம் பாகமான சிங்கம் 3 படத்தை எடுக்கவிருக்கும் இயக்குநர் ஹரி படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து விட்டு சூர்யாவிற்காக காத்திருக்கிறார். 24 மற்றும் ஹைக்கூ படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா இந்த 2 படங்களையும் முடித்து விட்டு சிங்கம் 3 யில் நடிக்க இருக்கிறார்.

Singam 3 Surya  In CBI Officer

வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும் இணைகின்ற 5 வது படம் இது.

சிங்கம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா இந்தப் படத்தில் முதல் முறையாக சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்தமுறை சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறார். விரைவில் படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

 

Post a Comment