ப்ளீ்ஸ் சண்டை போடாதீங்க: அஜீத், விஜய், சூர்யா ரசிகர்களுக்கு வெங்கி வேண்டுகோள்

|

சென்னை: சண்டை போடாதீர்கள் என அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

யார் சண்டை ஓய்ந்தாலும் ஓயும் இந்த அஜீத், விஜய் ரசிகர்கள் சண்டை மட்டும் ஓயவே ஓயாது போல. அவர்கள் எப்பொழுது மோதுவார்கள் என்றே யாராலும் கூற முடியாது. இருக்கவே இருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் என்று அதன் மூலம் தற்போது மோதிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கண்டமேனிக்கு மோதிக் கொண்டனர். இந்த சண்டையில் மாஸ் படம் தொடர்பாக சூர்யாவின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டனர். ஒருவரையொருவர் ஆசை தீரும் வரை திட்டித் தீர்த்தனர். இவர்கள் சண்டை போட்டதால் அது குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தயவு செய்து ஒருவரையொருவர் வெறுப்பதை நிறுத்துங்கள்!! இறுதியில் நாம் எல்லாம் ஒரே குடும்பம்!! சினிமாக்காரர்கள்!! அதனால் வெறுப்பை விட்டுவிட்டு சினிமாவை ரசியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment