10 நாட்களில் ரூ 355 கோடி... வசூலில் புதிய சாதனைப் படைக்கும் பாகுபலி!

|

பாகுபலியின் இப்போதைய வசூலை நிச்சயம் அதன் இயக்குநரும் படக்குழுவினரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ரூ 240 கோடியில் தயாரான இந்தப் படம், வெளியான பத்து தினங்களில் ரூ 355 கோடியைக் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

Baahubali collects Rs 355 cr in just 10 days

வசூல் விபரம்:

1. ஆந்திரா/தெலங்கானா - ரூ. 120 கோடி

2. கர்நாடகா - ரூ. 55 கோடி

3. தமிழ்நாடு - ரூ. 35 கோடி

4. கேரளா ரூ. 10 கோடி

5. வட இந்தியா (ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் சேர்த்து) - ரூ. 80 கோடி. இதில் இந்தி பாகுபலி மட்டும் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. தென்னிந்தியப் படம் ஒன்று இந்த வசூலை வட இந்தியாவில் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

6. வெளிநாடுகளில் - ரூ. 55 கோடி

இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் முதல் 10 நாள்களில் 350 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதில்லை. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படத்துக்கு, 300 கோடியைத் தொட 17 நாள்கள் ஆயிற்று.

இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகம் வசூலித்த தெலுங்குப் படம் என்கிற சாதனையையும் பாகுபலி நிகழ்த்தியுள்ளது.

இன்னும் கூட படத்துக்கு கூடும் மக்கள் கூட்டம் குறையவில்லை என்பதால், அடுத்த அடுத்த 10 நாள்களில் இதன் வசூல் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment