பாகுபலிக்கு அடுத்து, சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் படம் ருத்ரமாதேவி. குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம் பாகுபலிக்கு ஒரு வாரம் முன்பே வரவிருந்தது.
ஆனால் சட்டென்று ரிலீஸைத் தள்ளிப் போட்டுவிட்டார் இயக்குநர் குணசேகர்.
இப்போது பாகுபலி பட்டயக் கிளப்பிக் கொண்டிருக்க, இன்னும் சில நவீன தொழில்நுட்பங்களுடன் ருத்ரமாதேவியை களமிறக்கப் போகிறார்களாம்.
பாகுபலி 3டி வெளியாகவிருந்தது. ஆனால் ஏனோ 2 டியிலேயே வெளியிட்டுவிட்டார் ராஜமவுலி.
ஆனால் குணசேகரோ, ருத்ரமாதேவியை 3 டியில் கொண்டுவருவதில் உறுதியாக உள்ளார். ஆனால் இந்த 3 டியிலும் ஒரு புதுமை. பொதுவாக கண்ணாடி அணிந்துதான் 3 டி படத்தைப் பார்க்க முடியும். ஆனால் ருத்ரமாதேவியை கண்ணாடி அணியாமலேயே 3டி எஃபெக்டோடு பார்க்க முடியுமாம். அதற்கான வேலைகளைத்தான் குணசேகரன் அன்ட் டீம் செய்து வருகிறது.
இந்தப் பணிகள் முடிந்ததும் ருத்ரமாதேவி வரப் போகிறதாம்.
Post a Comment