வாகை சூட வா
1/11/2011 12:46:06 PM
தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய இயக்குநர் சற்குணம்(களவாணி), தற்போது மீண்டும் விமலின் படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு 'வாகை சூட வாÕ எனப் பெயரிட்டுள்ளனர். தன்னுடைய முதல் படத்தை போல இந்த படத்திலும் கிராமம் வாசம் கலந்த காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சற்குணம் தெரிவித்துள்ளார். மேலும் சமீபகலமாக தமிழ் சினிமாவில் 1960 முதல் 1985 வரை ஏற்படும் கதை சூழல்களை மையமாக கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படமும் 1960களில் நடக்கும் கதையாம், படத்தில் 60களில் வாழ்ந்த இளைஞன்போல் நடிக்கிறார் ஹீரோ விமல்.
Source: Dinakaran
Post a Comment