சென்னை: சளி, இருமல், மூச்சுத் திணறல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இன்னும் மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஒவ்வாமை மற்றும் அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். ஆனால் தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்ததால் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என்றும், நோய்த் தொற்று ஏற்பட்டதால் வைரஸ் காய்ச்சல் மற்றும் நெஞ்சில் சளி கட்டி மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.
எனவே கடந்த 4ந் தேதி மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளித்னர்.
காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி செய்கிறார். மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளையும் நலம் விசாரித்து ஆச்சர்யப்படுத்தி வருகிறாராம் ரஜினி.
இதற்கிடையே, அவர் இன்று டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிரார்த்தனை...
இதற்கிடையே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்தியா முழுவதும் அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனைகள், யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். மும்பை மற்றும் டெல்லி ரசிகர்கள் கடந்த இரு தினங்களாக சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் அங்குள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளை இசபெல்லா மருத்துவமனைக்கே நேரடியாக தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஒவ்வாமை மற்றும் அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். ஆனால் தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்ததால் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என்றும், நோய்த் தொற்று ஏற்பட்டதால் வைரஸ் காய்ச்சல் மற்றும் நெஞ்சில் சளி கட்டி மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.
எனவே கடந்த 4ந் தேதி மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளித்னர்.
காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி செய்கிறார். மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளையும் நலம் விசாரித்து ஆச்சர்யப்படுத்தி வருகிறாராம் ரஜினி.
இதற்கிடையே, அவர் இன்று டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிரார்த்தனை...
இதற்கிடையே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்தியா முழுவதும் அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனைகள், யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். மும்பை மற்றும் டெல்லி ரசிகர்கள் கடந்த இரு தினங்களாக சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் அங்குள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளை இசபெல்லா மருத்துவமனைக்கே நேரடியாக தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
Post a Comment