ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 இறுதிபோட்டியில் சாய்சரண் வெற்றி

|

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 இறுதிபோட்டியில் சாய்சரண் வெற்றி

9/27/2011 12:40:30 PM

விஜய் டி.வி.யில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3-யின் மாபெரும் இறுதிபோட்டியில், வெற்றியாளராக சாய் சரண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அபார்ட்மென்ட வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு வாரங்களாக நடந்த இறுதிச் சுற்றில் அதிக வாக்குகளின் அடிப்படையில் நான்கு போட்டியாளர்கள் சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரண், சந்தோஷ் ஆகியோர் பிரம்மாண்ட மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் பாடும் அரிய வாய்ப்பை பெற்றனர்.  இந்த நான்கு போட்டியாளர்கள் தங்களது திறமையை நேயர்கள் முன் நிரூபித்து வாக்குகளை பெற்றனர். இந்த இறுதிப்போட்டி விஜய் டிவியால் நேயர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு அதனை நேரடியாகவும் ஒளிபரப்பும் செய்தது. வர்களின் வெற்றி, பார்வையாளர்களின் வாக்குகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னை டிரேடு செண்டர், நந்தம்பக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த போட்டியாளர்கள் பாட, விறுவிறுப்பாக நடந்த வாக்களிப்பில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3-ன் வெற்றியாளராக சாய்சரண் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அபார்ட்மென்ட் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.  2வது வெற்றியாளராக சந்தோஷ்க்கு டாடா விஸ்டா காரும், 3வது வெற்றியாளரான சத்யபிரகாஷ்க்கு ரூ.3 லட்சமும், 4வது வெற்றியாளரான பூஜாவுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ், இசை மேதை எம்.எஸ். விஸ்வனாதன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் செல்வராகவன், பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், மால்குடி சுபா மற்றும் ஏராளமான பிரபல பாடகர்கள் கலந்துகொண்டனர்.




 

Post a Comment