பெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே சம்பள உயர்வு குறித்து நீடித்து வரும் மோதல் நேற்று முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
நேற்று இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால், மீண்டும் 9-ம் தேதி சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. அதுவரை படப்பிடிப்புகள் நடக்காது என்ற நிலையை பெப்சி மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எஸ் ஏ சந்திரசேகரன் தலைமையிலும், பெப்சி பிரதிநிதிகள் இயக்குநர் அமீர் தலைமையிலும் நேற்று பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழக அரசின் நோக்கம் புரிந்து நாங்கள் சிலவற்றை விட்டுத் தர முன் வந்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் நல்ல முடிவை எட்டி விடுவோம்," என்றார்.
இயக்குநர் அமீர் கூறுகையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேசிய பிறகுதான் விஷயம் முடிவாகும். அதுவரை படப்பிடிப்புகள் இருக்காது. இப்போதுள்ள நிலையே தொடரும்," என்றார்.
நேற்று இருதரப்புக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவை எட்டாததால், மீண்டும் 9-ம் தேதி சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது. அதுவரை படப்பிடிப்புகள் நடக்காது என்ற நிலையை பெப்சி மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் எஸ் ஏ சந்திரசேகரன் தலைமையிலும், பெப்சி பிரதிநிதிகள் இயக்குநர் அமீர் தலைமையிலும் நேற்று பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "தமிழக அரசின் நோக்கம் புரிந்து நாங்கள் சிலவற்றை விட்டுத் தர முன் வந்துள்ளோம். அடுத்த கூட்டத்தில் நல்ல முடிவை எட்டி விடுவோம்," என்றார்.
இயக்குநர் அமீர் கூறுகையில், வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேசிய பிறகுதான் விஷயம் முடிவாகும். அதுவரை படப்பிடிப்புகள் இருக்காது. இப்போதுள்ள நிலையே தொடரும்," என்றார்.
Post a Comment