ஹீரோயின் வேண்டாம் கேரக்டர் ரோல் போதும்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஹீரோயின் வாய்ப்பு வேண்டாம், கேரக்டர் வேடமே போதும் என்றார் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை மணந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர் சோனியா அகர்வால். நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். 'ஹீரோயின் வேடங்களில் நடித்து மீண்டும் எனக்குரிய இடத்தை பிடிப்பேன்Õ என்றார். அதன்படி 'ஒரு நடிகையின் வாக்குமூலம்Õ படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படம் வெளியாகி எடுபடாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஓய்வுக்காக சண்டிகர் சென்றார். அவரது சகோதரர் பிறந்த தினத்தையொட்டி சமீபத்தில் சென்னை திரும்பினார்.

தனது வீட்டில் நண்பர்கள், நெருக்கமான உறவினர்களுக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பெண்ணாக நானிருக்கிறேன். முன்பு எப்போதும் இருந்ததைவிட இப்போது எல்லாவற்றையும் முறையாக அணுகி செயலாற்றுகிறேன். என் வாழ்க்கை மீண்டும் புதிதாக வடிமைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இனி வரும் படங்களில் கேரக்டர் வேடங்களில் மட்டும் நடிப்பேன்.


 

Post a Comment