நடிகைகளுக்குள் ஈகோவா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அசின் கூறினார். இந்தியில், 'ஹவுஸ்புல் 2' என்ற படத்தில் நடித்துள்ளார் அசின். இதில் அக்ஷய்குமார் ஹீரோ. மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிரியங்கா ராவத், சஷான் பதம்ஸி ஆகிய நடிகைகளும் நடிக்கின்றனர். காமெடி படமான இதன் ஷூட்டிங்கில் ஹீரோயின்களுக்குள் ஈகோ மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது கூறியதாவது:
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது இந்தி சினிமாவில் புதிதில்லை. அதிகமான படங்களில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் கேரக்டர்கள் இருக்கிறது.

இதனால் பொதுவாக எல்லா நடிகைகளும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வருகிறது. இப்படி நடிப்பது ஆரோக்கியமானதுதான். 'ஹவுஸ்புல் 2' படத்தில் நடித்தபோது எங்களுக்குள் ஈகோ எட்டிப் பார்த்தது என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. ஷூட்டிங் முடிந்த பல நாட்கள் ஆகியும் இப்போதும் நாங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருடனும் எனக்குப் போட்டியில்லை. இந்தியில் ஆமிர்கான், சல்மான்கானுடன் நான் நடித்த படங்கள்தான் பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிறார்கள். வெற்றியை அவர்களுடன் நானும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு பெருமைதான்.

சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும்போதுதான் கமர்சியலாக நிலைக்க முடியும். 'நீல் நிதின் முகேஷூடன் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்கிறார்கள். என்னுடன் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் நான் நட்புடன் இருக்கிறேன். நீல் நிதினை நான் இரண்டு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அவர் எனக்கு நண்பர் கூட கிடையாது. அப்படியிருக்கும்போது அவருக்கும் எனக்கும் என்ன பிரச்னை இருக்க முடியும்? இவ்வாறு அசின் கூறினார்.


 

Post a Comment