மலையாளத்தில் தொடர்ந்து நடிக்க சசிகுமார் முடிவு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிருத்விராஜ், சசிகுமார், பியா, அனன்யா உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், 'மாஸ்டர்ஸ்'. ஜானி ஆண்டனி இயக்கியுள்ளார். வெள்ளிக்கிழமை ரிலீசான இந்தப் படம் அங்கு ஹிட்டாகியுள்ளது. இதில் நடித்தது பற்றி சசிகுமாரிடம் கேட்டபோது கூறியதாவது:
எனது 'சுப்ரமணியபுரம்', 'நாடோடிகள்' படங்கள் கேரளாவில் நூறு நாட்கள் ஓடியவை. இதையடுத்துதான் என்னை அங்கு நடிக்க கேட்டார்கள். நல்ல கதை என்றதால் 'மாஸ்டர்ஸ்' படத்தில் நடித்தேன். இதில் பிருத்விராஜும் நானும் கல்லூரி நண்பர்கள். அவர் போலீஸ் அதிகாரி ஆகிறார். நான் செய்தியாளர் ஆகிறேன். அவரது இன்வெஸ்டிகேஷனுக்கு நான் எப்படி உதவுகிறேன் என்பது கதை. இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்க்க முடிவு செய்து திருவனந்தபுரம் தியேட்டரில் பார்த்தேன். படம் முடிந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்டு ரசிகர்கள் பாராட்டிப் பேசினார்கள். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே நிறைய மலையாள வாய்ப்புகள் வந்தது. ஆனால், தமிழில் படங்கள் இருப்பதால் உடனே ஒப்புக்கொள்ளவில்லை. இங்கு நடிக்கும் படங்களை முடித்துவிட்டு தொடர்ந்து மலையாளத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.


 

Post a Comment