சயீப்பை திருமணம் செய்ய உள்ளதால் புதிய படத்தில் இருந்து கரீனா விலகினார். விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடு வார் என்று தெரிகிறது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 'ராம் லீலா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் கரீனா கபூர். திடீரென்று அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். காதலர் சயீப் அலிகானை மணக்க இருப்பதால்தான் கரீனா விலகியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கரீனா கூறியதாவது: ஒரு வாரத்துக்கு முன் 'ராம் லீலா' படத்தில் இருந்து விலகினேன். இப்படத்துக்கு 100 நாள் கால்ஷீட் ஒதுக்கினேன்.
ஆனால் இயக்குனர் பன்சாலி கூடுதலாக தேதி ஒதுக்கி தர வேண்டும் என்றார். வரும் ஆண்டில் 3 பெரிய படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு படம் அக்டோபரில் தொடங்குகிறது. எனவே கூடுதல் கால்ஷீட் தர முடியாது. மேலும் சம்பள விஷயத்திலும் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் படத்திலிருந்து விலகினேன். ஆனால் சயீப்பை விரைவில் மணக்க இருப்பதால்தான் நான் விலகியதாக கூறுகிறார்கள்.
நாங்கள் இருவரும் கடந்த 5 வருடமாக பழகிவருவது எல்லோருக்கும் தெரியும். எங்கள் திருமணம் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்போம். படத்தில் இருந்து விலகியதற்கு திருமணம் காரணம் இல்லை என்பதை வதந்தி பரப்புகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் முழுக்கு போடமாட்டேன். இவ்வாறு கரீனா கூறினார்.
ஆனால் இயக்குனர் பன்சாலி கூடுதலாக தேதி ஒதுக்கி தர வேண்டும் என்றார். வரும் ஆண்டில் 3 பெரிய படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு படம் அக்டோபரில் தொடங்குகிறது. எனவே கூடுதல் கால்ஷீட் தர முடியாது. மேலும் சம்பள விஷயத்திலும் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் படத்திலிருந்து விலகினேன். ஆனால் சயீப்பை விரைவில் மணக்க இருப்பதால்தான் நான் விலகியதாக கூறுகிறார்கள்.
நாங்கள் இருவரும் கடந்த 5 வருடமாக பழகிவருவது எல்லோருக்கும் தெரியும். எங்கள் திருமணம் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்போம். படத்தில் இருந்து விலகியதற்கு திருமணம் காரணம் இல்லை என்பதை வதந்தி பரப்புகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் முழுக்கு போடமாட்டேன். இவ்வாறு கரீனா கூறினார்.
Post a Comment