ரம்யா கிருஷ்ணனின் 'நீலாம்பரி' அவதாரம்...

|

Ramya Krishnan As Neelambari

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் புதிய சீரியல் ராஜகுமாரி சன் டிவியில் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணனின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நீலாம்பரி என்ற பெயரை தனது கதாபாத்திரத்தின் பெயருக்கு வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

காசி நகரத்தின் ஆன்மீக அழகுடன் கதை ஆரம்பித்துள்ளது. நீலாம்பரியின் பிறந்தநாள் தினத்தில் ஆண்டுதோறும் காசிக்கு வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்வது அவரது குடும்பத்தினரின் வழக்கம். இந்த ஆண்டு முக்கியமான பிறந்தநாள் என்றும் உன்னுடைய வாழ்க்கையில் திருப்பங்கள் வரப்போகிறது என்றும் கூறிய சாது நீலாம்பரியை சுவாமிக்கு அபிசேகம், அர்ச்சனை செய்யச் சொல்லுகிறார்.

தொடரின் மற்றொரு பகுதி சென்னையில் நிகழ்கிறது. சரத்பாபு, கிட்டி அண்ணன் தம்பிகள் அவர்களின் சொத்தும் வியாபாரமும் இணைந்தே இருக்கிறது. அவர்களைப் போல அவர்களின் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இதில் கிட்டி-கீதாவிற்கு பிறந்த மூத்த பெண் ராஜகுமாரியை சிறுவயதிலே தொலைத்து விடுகின்றனர். அந்த குழந்தைதான் நீலாம்பரியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.

தனது குடும்பத்தினரை நீலாம்பரி சந்திக்கிறாளா? அண்ணன் தம்பிகள் கடைசிவரை இதே ஒற்றுமையுடன் இருப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர்கிறது. பெரும்பாலான தொடர்களில் அண்ணன் சொல்வதைத்தான் தம்பி கேட்பார்கள். ஆனால் இந்த தொடரில் தம்பி கிட்டி கூறுவதை தட்டாமல் கேட்கிறார் அண்ணன் சரத்பாபு.

சினிமா, சீரியல் என எதிலும் தலை காட்டாமல் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த சரப்பாபு, கீதா ஆகியோர் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜகுமாரி தொடர் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தொடரின் கதைக்களம், காசி, சென்னை என பயணிக்கிறது. காட்சியமைப்புகள் அழகாக இருக்கிறது. படையப்பாவில் வெற்றி பெற்ற நீலாம்பரி இந்த தொடரை வெற்றிகரமாக கொண்டு செல்வாரா என்பது போகப்போகத் தெரியும்.

 

Post a Comment