ஹைதராபாத்: படங்களில் ஏக கவர்ச்சி காட்டி நடிப்பதாகக் கூறி நடிகைகள் ப்ரியாமணி மற்றும் அனுஷ்கா மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வந்த தெலுங்குப் படங்களில் அனுஷ்காவும், ப்ரியாமணியும் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம் எனும் அளவுக்கு நீச்சலுடைக் காட்சிகள் மற்றும் கவர்ச்சி உடைகளில் நடித்துள்ளார்களாம்.
இது சமூகத்தில் இளைஞர்களை தவறான திசைக்குத் திருப்பும் என்றும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் சமூக ஆர்வலர் சுபுத்தா கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன் நிற்காமல், தனது கருத்தை ஒரு வழக்காக மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார் சுபுத்தா.
அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் மிர்ச்சி என்ற படம் வெளியானது. ப்ரியாமணி நடித்த டிக்கா என்ற படம் சமீபத்தில் வெளிவந்தது.
Post a Comment