சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் மூலம் ஒரு ரவுண்ட் வந்த நடிகை சங்கீதா, இப்போது சின்னத்திரையில் கேம் ஷோ நடத்த வந்துவிட்டார்.
"காதலே நிம்மதி" படத்தில் அறிமுகமானவர் சங்கீதா. அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போகவே தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு "பிதாமகன்" படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்ததுதான் அவருக்கு பெரிய ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பிறகு "உயிர்" படத்தில் கொழுந்தனை விரும்பும் அண்ணி கேரக்டரிலும், "தனம்" படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமாவில் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கவே, 2009ம் ஆண்டு பிரபல டிவி சேனலில் நடுவராக வந்தார். அங்கு பாடகர் கிரீஸ் உடன் காதல் ஏற்படவே 2009 ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது.
எனினும் படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழில் இவர் நடித்த "புத்திரன்", தெலுங்கில் "துர்கா" ஆகிய படங்கள் வெளிவரவேண்டியது இருக்கிறது.
இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் சங்கீதா. அதனால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. எனினும் சன் டிவியில் நடுவராக வந்து செல்கிறார்.
இதுநாள் வரை நடுவராக வந்த சங்கீதா இப்போது "ஜீ தெலுங்கு" தொலைக்காட்சி நடத்தும் "பிந்தாஸ்" என்ற தெலுங்கு கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார். விரைவில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என்றால் ஓகே சொல்லும் சங்கீதா, சீரியல்களில் நடிக்க கூப்பிட்டால் நோ சொல்லி விடுகிறாராம்.
Post a Comment