சென்னை: தயாரிப்பாளர் சங்க மோதல் நாளுக்கு நாள் மிகவும் கேலிக்குரிய விஷயமாக மாறிவருகிறது.
நேற்று முன்தினம் சங்க வளாகத்தில் கேயார் மற்றும் சந்திரசேகரன் அணியினர் மோதிக் கொண்டனர். கைகலப்பில் இறங்கிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து இப்போது போலீஸில் புகார் தரும் படலத்தைத் தொடங்கியுள்ளனர்.
கேயார் அணியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் மனு அளித்தார். பின்னர், நிருபர்களிடம் கேயார் கூறுகையில், "கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் பதவி விலகாமல் இருப்பது சரியல்ல.
வருகிற 24-ந்தேதி அவர் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 21 பைல்கள் காணாமல் போய் உள்ளன. இது கிரிமினல் குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
Post a Comment