தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக ஏ ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஜாக் கூட்டம் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், பம்பரக் கண்ணாலே, பூ, கனா கண்டேன், உயிர், நண்பன், பாகன் என குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் நடித்தவர், ஸ்ரீகாந்த்.
இப்போது ஓம் சாந்தி ஓம் மற்றும் நம்பியார் ஆகிய இரு பெரிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
அவரது மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக ஏ ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகள் மற்றும் அனைத்து தொடர்புகளுக்கும் செய்தியாளர்கள் மற்றும் திரையுலகினர் இனி ஜான் பிஆர்ஓவை அணுகுமாறு இன்று அதிகாரப்பூர்வமாக நடிகர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
Post a Comment