பாடகரானார் தம்பி ராமையா... குத்துப் பாடல் பாடி ஆட்டம்!

|

Thambi Ramaiya Turns Play Back Singer

உ படத்தில் நாயகனாக நடிக்கும் தம்பி ராமையா, அந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

பன்முகத் திறமை கொண்ட தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா. வடிவேலு இல்லாத குறையை இப்போது நிவர்த்தி செய்து வருபவர் அவர்தான்.

உ படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற காமெடி தான் உ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் நடக்கிறது.

இப்போது இன்னொரு சர்ப்ரைஸ் செய்தி, தம்பி ராமையாக உ படத்தில் முதல் முறையாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகம் ஆகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள "ஒரு படி மேல" என்று தொடங்கும் தத்துவக் குத்துப்பாடலை பாடி அசத்தியுள்ளார்.

மிக அழகாக பாடியதோடு அதே பாடலுக்கு சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் நடந்த படப்பிடிப்பில் செம ஆட்டமும் போட்டிருக்கிறார்.

இது பற்றி தம்பி ராமையா கூறுகையில், "இந்த யூத் டீம் கூட ஒர்க் பண்றது உற்சாகமான அனுபவம், கிட்டத்தட்ட இந்த டீம்ல எல்லாருக்குமே 24 வயசுக்கும் குறைவு. அதோட இந்த டீம் கிட்ட ஈகோ அப்டிங்கிறது சுத்தமா இல்ல. நான் அதைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.

இந்த 'ஒரு படி மேல...' பாட்டை நான் ரசிச்சி பாடி இருக்கேன். என் பாட்டுக்கு நானே பாடகராகவும் டான்சராகவும் இருப்பது இதுதான் முதல் முறை.

தம்பி அபிஜித்தோட அற்புதமான ட்யூன் தம்பி முருகன் மந்திரம் ஆழமான வரிகள் எழுதி இருக்கிறார். கண்டிப்பா இந்தப் பாட்டு மெலடியாவும் அதே சமயம் கமர்சியலாவும் பெரிய ஹிட் ஆகும்னு நம்புறேன். இந்த யூத் பெரிசா வருவாங்க. அவங்களுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்," என்றார்.

 

Post a Comment