விஜயா புரொடக்ஷன் நிறுவன அதிபர் மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டையொட்டி தயாராகும் பிரமாண்ட திரைப்படத்தில் அஜீத் நடிப்பது தெரிந்ததே.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாதில் தொடங்கியது.
இந்தப் படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஈழத் தமிழர் உண்ணாவிரதம் காரணமாக நான்கு நாட்கள் ஒத்திப் போடப்பட்டது.
விஜயா வாஹினி சார்பில் தயாராகும் இந்தப் படத்தை, சிறுத்தை படம் இயக்கிய சிவா இயக்குகிறார். அஜீத்தின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், பாலா, முனீஸ், சுஹைல், சந்தானம், நாடோடிகள் அபிநயா, நந்தகி உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்று தொடங்கும் படப்பிடிப்பு வரும் 20 தேதி வரை ஹைதராபாதில் நடக்கிறது.
அஜீத்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகி வந்த 'வலை' படம் அண்மையில் மும்பையில் நடந்த படப்பிடிப்புடன் முடிவுக்கு வந்தது.
தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. கோடை விடுமுறை ஸ்பெஷலாக 'வலை' திரைக்கு வருகிறது.
Post a Comment