சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு கர்ப்பனை காமெடி இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி பல ஜோக்குகள் இணையதளங்களில் உள்ளன. ரஜினிகாந்த் இங்கிருந்து கொண்டே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதியை ப்ளூடூத் மூலம் கொன்றார். நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே ரஜினி தான் என்று பல்வேறு ஜோக்குகள் உலா வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஜினிகாந்த் விளையாடினால் எப்படி இருக்கும் என்று புதிய ஜோக் ஒன்று இணையதளங்களில் உலா வருகிறது.
சென்னை அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்படுகிறதாம். ஆனால் ஒரு பந்து தான் பாக்கி உள்ளதாம். பந்தை ரஜினி எதிர்கொள்கிறாராம். அனைவரும் டென்ஷனாக இருக்க பந்தை ரஜினி அடித்தவுடன் அது 4 துண்டுகளாக உடைகிறதாம். 4 துண்டுகளுமே சிக்ஸருக்கு போகிறதாம். ஒரே பந்தில் 24 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டதாம்.
அது யாரைய்யா கெய்ல், ரஜினி மாதிரி அடிக்க முடியுமா?
Post a Comment