ரஜினியை இயக்குவார், ஆர்யாவை இயக்குவார், மீண்டும் சூர்யாவுடன் கைகோர்ப்பார் என்றெல்லாம் பேசப்பட்ட கேவி ஆனந்த் அடுத்து இயக்கப் போவது தனுஷை!
'கோச்சடையானு'க்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஆக்ஷன் படத்தை கே வி ஆனந்த் இயக்குவார் என்றும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்றும் பேசி வந்தனர்.
ஆனால் இதுகுறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையில் ஏஜிஎஸ் நிறுவனமே, இந்த ஆண்டு மிகப் பெரிய படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. இது ரஜினி படமாகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டது.
வழக்கமாக கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார். ஆனால் இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்களுக்குப் பிறகு இந்தப் புதிய படம் தொடங்கும் என்று தெரிகிறது.
Post a Comment