கோவையில் பிறந்து இப்போது சென்னைவாசியாக மாறியிருக்கிறார் டிவி நடிகை ஆனந்தி. கனாக் காணும் கோலங்கள் தொடங்கி கார்த்திகைப் பெண்கள் வரை எல்லாமே சூப்பர் சீரியல்களாம் ஆனந்திக்கு. இது தவிர ரியாலிட்டி ஷோக்களில் நடனமாடி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளார்.
சீரியல், நடனம், என புகழ் பெற்றாலும் படிப்பிலும் படு சுட்டியாம். எம்.எஸ்.சி ஐ.டி பட்டம் பெறப்போவதை மகிழ்ச்சியோடு தோழிகளுக்கு ட்வீட் செய்துள்ளார்.
படிப்பு, நடிப்பு என ஒரு பக்கம் இருந்தாலும் ஆனந்தியின் ஆர்வம் முழுக்க நடனம்தானாம். அதற்குக் காரணம், ஆனந்தியின் அம்மா கோவையில் நடத்திக்கிட்டிருக்கிற 'ரேணு ரித்யாலயா நடனப் பள்ளிதான்.
விஜய் டி.வியின் 'கனா காணும் காலங்கள்' ஆடிஷன்ல தேர்வாகி, இப்போ நடிக்கத் தொடங்கியதில் இருந்து இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியா ஆகிவிட்டார். இப்போது நடிப்பு, நடனத்தோட நண்பர்கள் எடுக்குற குறும்படங்களுக்கு ஸ்கிரிப்ட் ஐடியா கூட கொடுக்கிறாராம் ஆனந்தி.
Post a Comment