சென்னை: சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கிற்காக இமய மலை சென்றுள்ளதால் அவரை மிஸ் பண்ணுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நயன்தாராவை அழைத்து வந்து தன்னுடன் ஆடவிடாமல் தனுஷ் குத்தாட்டம் போட்டுவிட்டாரே என்று சிவகார்த்திகேயன் வருத்தப்பட்டார். இருப்பினும் தனுஷும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
இந்நிலையில் தனுஷ் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சிவகார்த்திகேயன் மிஸ்ஸிங். அவர் இமய மலையில் ஷூட்டிங்கில் இருப்பதாக கிடைத்த தகவலைக் கேட்டு நாங்கள்(நான் அனி சதீஷ்) கவலையாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில், சர். தேனி மலையடிவாரத்தில் தான் ஷூட்டிங். அதை யாரோ இமய மலை என்று புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். உங்களை விட்டுட்டு எங்கே போவேன், எப்படி போவேன் என்று கேட்டுள்ளார்.
அடடா சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் மீது இவ்வளவு பாசமா?
Post a Comment