விஜய்யை வைத்து ஏற்கெனவே இயக்கிய துப்பாக்கி மற்றும் அடுத்து இயக்கப் போகும் படத்துக்கான கதையை தன் உதவி இயக்குநரிடமிருந்தே சுட்டுவிட்டார் ஏ ஆர் முருகதாஸ் என்ற பரபர குற்றச்சாட்டு கோலிவுட்டில் உலாவருகிறது.
விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் எடுத்த துப்பாக்கி, அவரது உதவி இயக்குநர் ஒருவரின் கதையாம். தான் முதல் முறையாக இயக்கும் படத்தின் கதை இதுதான் என்று அந்த உதவி இயக்குநர் முருகதாசிடம் கூறியிருந்தாராம்.
ஆனால் அவரால் சொன்னபடி படம் இயக்க முடியாமல் போக, அந்தக் கதைத்தான் துப்பாக்கியாக சுட்டாராம் ஏஆர் முருகதாஸ்.
அடுத்து ஆஸ்கர் பிலிம்சுக்காக விஜய்யை வைத்து புதுப்படம் இயக்கப் போகிறார் முருகதாஸ். இந்தப் படத்துக்கு கதை தேடிக் கொண்டிருந்தபோது.. இன்னொரு உதவி இயக்குநர் வந்திருக்கிறார். 'அண்ணே இது நான் இயக்கும் முதல் படக் கதை' என முருகதாசிடம் சீன் வாரியாக சொல்ல, 'அடடே அருமையா இருக்கேப்பா' என சொல்லி அனுப்பி வைத்தாராம்.
அடுத்த ஒரு மாதத்தில் விஜய் படத்தின் கதை, திரைக்கதையை தயார் செய்யும் வேலையில் மும்முரமாகிவிட்டார் முருகதாஸ். அதை தனது புதிய உதிவியாளர்களுடன் டிஸ்கஸ் செய்திருக்கிறார். அவர்களில் ஒரு பழைய உதவியாளருக்கு நெருங்கிய நண்பர். அவர் போய், "உன் கதையைத்தான் அடுத்து விஜய் படத்துக்கு சுட்டுவிட்டார் நம்ம டைரக்டர்," என்று போட்டுக் கொடுக்க, கடுப்பாகிப் போன பழைய உதவி, முருகதாஸிடம் நியாயம் கேட்டிக்கிறார்.
"அதுவாப்பா... நீ கதை சொல்லிட்டே. ஆனா படம் பண்ற மாதிரி தெரியல. அதான் நாம வச்சிக்கலாம், உன் பெயரைப் போட்டுடலாம்னு நெனச்சேன்," என சமாளித்து அனுப்பினாராம் முருகதாஸ்.
இப்போது புதுக் கதையை ரெடி பண்ணுவதில் பிஸியாக இருக்கிறாராம் முருகதாஸ், உதவியாளர்களை கடுமையாக திட்டியபடி!
Post a Comment