செல்போன் பேசினால் ரூ.150 அபராதம் போடும் குஷ்பு

|

நடிகை குஷ்பு டிவி சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் செல்போனில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அபராதம் விதிக்கிறாராம்.

சின்னதிரை படப்பிடிப்புத் தளங்களில் சில நடிக, நடிகைகள் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால், படப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் செட்டுகளில் இயக்குநர்கள் டென்ஷனில் கொதிப்பார்கள்.

செல்போன் பேசினால் ரூ.150 அபராதம் போடும் குஷ்பு

இதை எப்படி சரி செய்வது என்று நினைத்த நிலையில் பூனைக்கு முதலில் மணி கட்டிய பெருமைக்குரியவர் நடிகை குஷ்புதானாம்.

தான் தயாரித்து நடிக்கும் தொடர்களில் யாராவது படப்பிடிப்பு நேரத்தில் செல்லில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அங்கேயே வசூலிக்கப்படும் என்று அறிவித்தாராம் குஷ்பு. இதைக் கடந்த கடந்த நான்கு ஆண்டுகளாக, இன்றளவும் பின்பற்றி வருகின்றார் குஷ்பு. இதனால் குஷ்புவின் செட்டில் செல்போன் சத்தத்தையே கேட்கமுடியாத நிலை ஏற்பட்டது என்கின்றனர்.

 

Post a Comment