அஞ்சலி வழக்கு... டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

|

சென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக நடிகை அஞ்சலி புகார் கூறி இருந்தார்.

அஞ்சலி வழக்கு... டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் நடிகை அஞ்சலி 22-ந் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அஞ்சலி நேரில் ஆஜராவதிலிருந்து உயர்நீதிமன்றம் விலக்களித்துவிட்டதால், நடிகை அஞ்சலி நேற்று ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

 

Post a Comment