சென்னை: கீதாஞ்சலி படத்துக்குப் பிறகு மீண்டும் நேரடி தெலுங்குப் படம் இயக்குகிறார் மணிரத்னம்.
கடைசியாக கடல் என்ற படத்தை தமிழில் இயக்கினார் மணிரத்னம். ஆனால் அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது.
அதன் பிறகு அடுத்த படம் குறித்துப் பேசாமல் இருந்தார்.
இப்போது அடுத்ததாக நேரடி தெலுங்குப் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு முக்கிய வேடத்தில் நாகார்ஜுனாவும் நடிக்கிறார்.
மணிரத்னத்தின் முதல் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடித்தவர் நாகார்ஜுனா என்பது நினைவிருக்கலாம்.
இந்தியில் மணிரத்னம் இயக்கிய அத்தனைப் படங்களும் தோல்வியைத் தழுவின. தமிழில் அவர் கடைசியாக இயக்கிய வெற்றிப் படம் அலைபாயுதே.
இப்போது தெலுங்குக்குப் போயிருக்கிறார். எப்படியும் இந்தப் படம் தமிழிலும் டப் ஆகும், இதயத்தைத் திருடாதே மாதிரி. தெலுங்கில் அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கிறதா.. பார்க்கலாம்!
Post a Comment