சென்னை: நடிகர்கள் விஷால், நாசர், சந்தானம் மற்றும் சிவகுமாருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்து நாசர் கூறுகையில், "எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோதி இருக்கலாம்.
இன்னும் சிலருக்கும் இது போல் மிரட்டல் விடுத்து மொட்டை கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தேன். இதனை நான் சும்மா விடப்போவது இல்லை. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் போலீசில் புகார் அளிப்பது குறித்து முடிவு செய்வேன்," என்றார்.
சிவக்குமார், விஷால், சந்தானம் போன்றோருக்கும் இதுபோல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய சம்பந்தப்பட்ட நடிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
Post a Comment