சென்னை: மாவட்ட நாயகி தனது படங்கள் வெற்றி பெறவும், காதல் கிசுகிசுக்கள் அடங்கவும் வேண்டி காளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
மாவட்ட படம் ஹிட் என்று வெளியே கூறினாலும் படம் ஊத்திக் கொண்டதாக ஒரு பெரிய தயாரிப்பாளர் மேடையில் பகிரங்கமாக தெரிவித்தார். அதன் பிறகு தான் பலருக்கும் படம் பப்படமான விஷயமே தெரிய வந்தது. அந்த படத்தின் நாயகிக்கு அண்மையில் எந்த படங்களும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அவருக்கும் ஆந்திராவில் உள்ள பெத்த மனிதர் ஒருவருக்கும் காதல் என்று அவ்வப்போது கிசுகிசுக்கள் வேறு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கவலை அடைந்த அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று தனது கெரியர் டாப் கியரில் செல்ல அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம்.
அம்மணி கோவிலுக்கு சென்ற வேகத்தில் திரும்பிவிடாமல் நிதானமாக சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார்.
Post a Comment