நாமக்கல்: நடிகை நமீதா பங்கேற்ற விழா மேடை சரிந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.
விழா மேடை சரிந்ததால் லேசான காயத்துடன் அவர் பாதியிலேயே கிளம்பினார்.
நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் "மணவாழ்க்கை" எனும் சமூக நாடகம் நடந்தது.
அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சினிமா இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு நமீதா நாடக மேடைக்கு வந்தார்.
நமீதாவை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்களும் மேடையில் ஏறினர். அதனால் மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த நமீதா நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர்.
அதிர்ச்சியடைந்த நமீதா சிறு காயத்துடன் காரில் ஏறி ஓட்டம் பிடித்தார்.இந்த திடீர் அதிர்ச்சியால் நாடக விழா ரத்து செய்யப்பட்டது.பாவம் மேடையில் இருந்தவர்கள் சரிந்து விழுந்ததுடன் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக ஏகத்துக்கும் எடையேறிக் காணப்படுகிறார் நமீதா. உடற்பயிற்சியை தொடராமல் விட்டதாலும், முன்பு போல படங்கள் இல்லாததால் நடிப்புப் பயிற்சி குறைந்து போய் விட்டதாலும் உடல் உப்பி விட்டது நமீதாவுக்கு.. பாவம்.. அதுதான் மேடை பாரம் தாங்காமல் படுத்து விட்டது போல.
Post a Comment