தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர் எனப் புகழப்படும் சிவாஜி கணேசனின் 13வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இணையில்லா நடிகரான சிவாஜி கணேசன் கடந்த 2004-ம் ஆண்டு இதே நாளில் மரணத்தைத் தழுவினார். அவரது நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி உருப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் சிவாஜி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் மலர் தூவி வணங்கினர். அண்ணாசாலையில் சிவாஜி சிலைக்கு அவரது மகன் பிரபு மாலை அணிவித்தார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் மாலை அணிவித்தனர். உடல் ஊனமுற்ற பெண்களுக்கு சிவாஜி சமூக நல பேரவை சார்பில் செயற்கை கால் சாதனங்களை சந்திரசேகரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவாஜி சமூக நலப் பேரவை மற்றும் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.
Post a Comment