ரஜினி வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து வாழ்த்திய நடிகர் பார்த்திபன்

|

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஜோதியில் கலந்துள்ள நடிகர் பார்த்திபன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

இன்று பிறந்திருப்பது நாளல்ல ஒரு நட்சத்திரம்! தேர் இழுக்கவே ஊர் கூட வேண்டும் ஊருக்குள் பேரெடுக்க நூறு தேராது இழுக்கவேண்டும்

ரஜினி வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து வாழ்த்திய நடிகர் பார்த்திபன்

ஒருவர். உலகம் முழுக்க ஒருவரின் 'லிங்கா' தரிசனம் காண முன் பதிவு செய்கிறதென்றால் அவர் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருத்தல் வேண்டும். (அ'பூர்வ ஜென்ம கர்மா)

என் மகர் ராக்கி எந்த பிரமாண்டத்தையுமே பிரமித்து பாராமல் எதையுமே மிக சாதாரண பார்க்கும் இயல்புடையவர். என்னையெல்லாம் அரைக்கால் சட்டை அணிந்து கோலி ஆடும் பையனாகவே குனிந்து பார்ப்பார். நானும் அதை அலாதியாய் ரசிப்பேன்.

நேற்றிரவு அவரின் fb பதிவில் "3 mins more..."என்றிருந்தது. மணி பார்த்தேன் 11.57pm.

அப்போதுதான் ரஜனி சாரின் அற்புதம் விளங்கியது எனக்கு. ஒரு நிமிடம் இருக்கும் தருவாயில் திருமதி ரஜனியை அழைத்து சாருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள் என்றேன்.

தலையணையில் post செய்தால் தலைவனிடம் deivery ஆகிடுமே!

இவ்வாறு தமக்கே உரித்தான குறும்புடன் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

 

Post a Comment