லிங்காவில் இடம்பெற்றுள்ள முத்தான பத்து வசனங்கள் இவைதான்...!

|

சென்னை: இன்று திரைக்கு வந்துள்ள லிங்கா திரைப்படத்தில் ஈர்க்கும் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் ரஜினிகாந்த் மற்றும் சந்தானம் சார்ந்த வசனங்களாகவே அவை உள்ளன.

லிங்காவில் கவனம் ஈர்க்கும் வசனங்கள், காமெடி டயலாக்குகள் இவைதான்:

லிங்காவில் இடம்பெற்றுள்ள முத்தான பத்து வசனங்கள் இவைதான்...!

*ஒரு வேள சாப்பிடலன்னா பிரச்சினை இல்லை. ஒரு வேளை கூட சாப்பிடலன்னா அது பிரச்சினை.

*ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமத்து போயிடும்.

*ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் 'மாமா வேலை' செய்ராரு. என்ன வேல செய்யுராரு? அதான் சொன்னனே (!)

* நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்.. முடியாததுல இறங்க மாட்டேன்.

*எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்ற ஒரே தொழில் திருட்டுத்தொழில்.

*ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்.

*நீ வேணாம், வேணாம்னா கூட மக்கள் விட மாட்டாங்க போல. ஊரே உனக்கு மரியாதை கொடுக்குது (சந்தானம் டூ ரஜினி).

*ஸ்பெஷல் டீ குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்.

*வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை.

*அரண்மனையில் இருப்பவங்க எல்லாம் ராஜா இல்லை. எங்க இருந்தாலும் தன்கிட்ட இருப்பதை இல்லாதவர்களுக்கு தர்ற எல்லோரும் மனதளவில் ராஜாதான்.

 

Post a Comment