சென்னை: இன்று சூப்பர் ஸ்டாரின் ஆக்ஷன் திரைப்படமான லிங்கா திரைப்படம் வெளியானதை ஒட்டி ஜப்பானைச் சேர்ந்த நான்கு ரஜினி ரசிகர்கள் சென்னைக்கு வந்து படத்தினை முழுவதுமாக ரசித்தனர்.
சென்னை, காசி தியேட்டரில் லிங்கா படத்தினை ரசித்த யாசுடா ஹிட்டாய்ச்சி என்பவர் உட்பட மேலும் மூன்று ரஜினி ரசிகர்கள் ஒசாகாவில் இருந்து வந்திருந்தனர்.
ரஜினியின் படம் போட்ட டிசர்ட், கையில் லிங்கா பட கார்டுகளுடன் வந்து லிங்கா படத்தின் முதல்நாள் ஷோவினை ரசித்தனர்.
யாசுடா தமிழும் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட ரஜினியின் திரைப்படங்களை ரசித்துள்ளாராம் அவர். "எனக்கு ரஜினி காந்தின் ஸ்டைல், ஆக்ஷன், ஹூயூமானிட்டி எல்லாமே பிடிக்கும். நான் லிங்கா பார்ப்பதற்காகவே சென்னை வந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
நான்கு பேரில் இருவர் பெண்கள். இவர்கள் நால்வரும் இணைந்து சிவாஜி படத்தின் சூப்பர் ஹிட் பாட்டான காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் பாட்டினை கொஞ்சிக் கொஞ்சி பாடி ஆடிப் பாடினார்கள். "ஹேப்பி பர்த்டே தலைவா" என்றும் கோஷமிட்டார்கள்.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment