சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் காலமானார்.
சிவந்த மண், இருகோடுகள், பூவா தலையா, எதிர் நீச்சல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பாலகிருஷ்ணன். இவர் இயக்குநர் விசுவின் பெரும்பாலான படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
84 வயதான பாலகிருஷ்ணன் சமீபகாலமாக உடல் நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மறைந்த பாலகிருஷ்ணனுக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அன்னாரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
Post a Comment